நல்­லாட்­சியில் பாரி­ய­ளவில் சீர்­கு­லை­வுகள் ஏற்­ப­டு­கின்­றன: அமீர்­அலி

நல்­லாட்­சி­யிலும் சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­ப­டு­கின்­றது. மாணிக்­க­மடு புத்­தர்­சிலை விவ­காரம் பல­வந்­த­மாக செயற்­ப­டுத்­தப்­பட்­டது. 

ameer-ali

மேலும் மட்­டக்­க­ளப்பில் பிக்கு ஒருவர் செயற்­பட்ட விதம் போன்­றவை எமக்கு கவலை அளிக்­கி­றது. எவ்­வா­றா­யினும் நாம் அனை­வரும் ஒற்­று­மை­யாக வாழ வேண்டும். இல்­லையேல் சிறந்த இலங்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வது கடினம் என பிரதி அமைச்சர் அமீர்­அலி தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை வரவு –செலவு திட்­டத்தின் மீதான மூன்றாம் நாள் விவா­தத்தின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது;

2017 ஆம் ஆண்டு வரவு– செலவுத் திட்­டத்தின் போது கல்­வித்­து­றையின் முன்­னேற்­றத்­திற்கு போது­மான அளவு நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. மாண­வர்­க­ளுக்கு டெப் வழங்கும்  விடயம் பாராட்­ட­த்தக்க விட­ய­மாகும். 

அதே­போன்று நாட்டின் அபி­வி­ருத்­தியில் வடக்கு,கிழக்கு அபி­வி­ருத்தி அதி­க­ளவில் அக்­கறை செலுத்­தப்­பட வேண்டும். நல்­லாட்­சியில் பல்­வேறு அபி­வி­ருத்தித் திட்­டங்கள் முன்­வைக்­கப்­பட்­டாலும் நல்­லாட்­சியில் பாரி­ய­ளவில் சீர்­கு­லை­வுகள் ஏற்­ப­டு­கின்­றன.

மாணிக்­க­ம­டுவில் பல­வந்­த­மாக புத்தர் சிலை அமைக்­கப்­பட்ட விடயம் எமக்கு கவலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அதே­போன்று  அண்­மையில் மட்­டக்­க­ளப்பில் பிக்கு ஒருவர் செயற்­பட்ட விதம் சிறு­பான்மை இனத்­த­வர்­களை அதி­ருப்­திக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளது.

சிங்கள மக்களின் மீள்குடியேற்றத்தில் பிரச்சினை உள்ளது. எனினும் அதனை பேசித் தீர்மானிக்க வேண்டும். அதற்கு மாறாக பலவந்தமாக செயற்படக் கூடாது என்றார்.