நாட்டில் இனவாதத்தை தூண்டிவிட்டு நாட்டின் அபிவிருத்தியை நல்லாட்சி மறந்துவிடுகின்றது : மஹிந்த

நாட்டில் இனவாதத்தை தூண்டிவிட்டு நாட்டின் அபிவிருத்தியை நல்லாட்சி மறந்துவிடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

mahinda-rajapaksa

நேற்று மாத்தறை வெளிகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார் .

மேலும் இதுவரை வடக்கில் எந்தவித அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை என்றும், வடமாகாண முதலமைச்சர் ஊடாக நாட்டில் இனவாதம் தூண்டப்பட்டு மக்கள் வேறுபக்கங்களுக்கு திசை திருப்பப்படுவதாகவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.