தேசிய காங்கிரஸின் தலைமையை பலப்படுத்த வேண்டிய தருணம் இதுவே : எம்.எல்.ஏ.அமீர்

 

athaullah national congressJ.M.Wazeer

நாட்டின் அரசியலமைப்பு மாற்றப்படவுள்ள இந்த தருணத்தில் கிழக்கு மாகாண மக்களின் இறைமை ,பாதுகாப்பு அரசியல் இருப்பு என்பனவற்றை உறுதிப்படுத்துவதற்காக நாம் தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ .எல்.எம் அதாஉல்லா அவர்களை பலப்படுத்தவேண்டும் என தேசிய காங்கிரசின் மாகாண சபை உறுப்பினர் எம் .எல்.ஏ அமீர் அவர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார் .

ameer_fotor

தேசிய காங்கிரஸினால் அவருக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட ஒழுக்காற்று விசாரணை முடிவுறுத்தப்பட்டு அவர் தொடர்ந்தும் கட்சிப்பணிகளில்  ஈடுபடுகின்றமை தொடர்பான அவரது அறிக்கையிலேயே  இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கடந்த பாராளுமன்றத்  தேர்தலின்போது தேசிய காங்கிரஸின் தலைவர் உள்ளிட்ட கட்சியின் வேட் பாளர்களுக்கு   ஆதரவாக பகிரங்கமாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் தனது தனிப்பட்ட காரணங் களினால் ஈடுபட முடியாமல் போனமைக்காக தான் மனம் வருந்துவதாகவும் இந்த விடயம் தொடர்பில் கட்சியின் உயர் பீடத்திட்டம் தனது தவறை ஏற்றுக்கொண்டு தான் மன்னிப்பு கோரியதாகவும் அதனை ஏற்றுக்கொண்ட உயர் பீடம் தன்னை கட்சி நடவடிக்கைகளை தொடருமாறு கோரியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார் .

கடந்த பாராளுமன்றத் இடையில் ஏற்பட்ட இடைவெளியை  தேர்தலின் பின்னர் தனக்கும் கட்சிக்கும்   இடையில் ஏற்பட்ட இடைவெளியை குறைத்து கட்சியின் செயற்பாடுகளை தொடருவதற்காக 23.09.2016 ஆம் திகதி நடை பெற்ற கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தில்  தான் கலந்து கொண்டு தனது நிலைப்பாடுகளை விளக்கியத்துடன்  கட்சிப் பணிகளை தான் ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

தேசிய காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்திற்கு அமையவே எதிர்வரும் காலங்களில் மாகாண சபை நடவடிக்கைகளிலும் தான் செயற்படவுள்ளதாகவும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.