முதலமைச்சரின் கருத்தினால் தெற்கில் இனவாதம் வலுப் பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது : மஹிந்த

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று வெளியிட்ட கருத்தை வன்மையாக கண்டிப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் நேற்றைய தினம்வெளியிட்டுள்ள கருத்தினால் நல்லிணக்க செயற்பாட்டிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அரசாங்கத்தின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான அவரின் கருத்துக்கள் அமைந்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், வடக்கு முதல்வரின் கருத்தின் காரணமாக தெற்கில் இனவாதம் வலுப் பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது என அமைச்சர் கவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு வாழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க முன்னெடுக்கின்ற போராட்டங்களினால், தென் பகுதியிலுள்ள மக்கள் அவசரப்பட தேவையில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.