சில கட்சிகளை இணைத்துக்கொள்ள ஜனாதிபதி தீர்மானம் !

images (1)பொதுத் தேர்தலை முகம் கொடுப்பதற்காக ஜாதிக ஹெல உறுமய ஜனநாயக கட்சி உட்பட மேலும் சில கட்சிகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைத்துக்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக இலங்கை பத்திரிகை ஒன்று  செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் ஸ்ரீலங்கா  சுதந்திரக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, தேச விடுதலை மக்கள் கட்சி ஆகியன மாத்திரமே அங்கம் வகிக்கின்றன. இடது சாரி கட்சிகள் உட்பட மேலும் சில கட்சிகள் முன்னணியுடன் இணைந்து செயற்பட்டாலும் இக்கட்சிகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கூட்டுச்சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.