புத்தளத்தின் மீது றிசாத் கொண்டுள்ள அளப்பறிய பற்றினை தாங்கிக் கொள்ளமுடியாத கைக்கூலிகல்

கைக்கூலிகளின் கையாளாகாத்தனத்தின் மற்றுமொரு வெளிப்பாடுஅமைச்சர் றிசாத் பதியுதீனை தொடர்புபடுத்தி நடக்காத சம்பவத்தை  நடந்ததொன்று போல் சித்தரித்து கூட்டிக்கொடுக்கும் அசிங்கத்தனமான ஒரு செய்தி முகநுாலில் மீண்டும் வந்துள்ளது.

rishad

புத்தளம் மன்னார்  வீதி பகுதியில் காரொன்றில் வைத்து நபரொருவர் கைது செய்யப்பட்டதாகவும் அந்த நபரை அமைச்சர் றிசாத் பொலீஸாரின் பிடியில் இருந்து விடுவித்தாகவும்,அமைச்சர் றிசாத் பதியுதீனின் அரசியல் வளர்ச்சியைக்கண்டு தொடை நடுங்கி போயுள்ள ஏமாற்று அரசியல் கட்சியொன்றின் ஏஜெண்டுகள் இல்லாத செய்திகளை உருவாக்கி முகநுாலில் பரவிவருகின்றனர்.

அமைச்சர் றிசாத் பதியுதீனை பொறுத்த வரையில் அவரது அரசியல் வளர்ச்சி அல்லாஹ்வின் உதவியால் உயர்ந்து கொண்டே போகின்றது.ஆனால் வளர்ச்சியினை கண்டு முக்காட்டுக்குள் ஒழிந்து கொண்டு அசிங்கத்தனமான லீலைகளில் ,ஈடுபட்டுவரும் அரசியல் பினாமிகள் புத்தளம் சமூகத்தின் மீது அமைச்சர் றிசாத் கொண்டுள்ள அளப்பறிய பற்றினை தாங்கிக் கொள்ளமுடியாத நிலையில் நடக்காததொன்றை நடந்ததாக கூற ஆரம்பித்துள்ளனர்.

ஒருவரின் முயற்சியில் காழ்புணர்வு கொண்டு தான் கையாலாகாதவண் என்பதை உணர்த்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் தெளிவு படுத்தாமல் இருக்க முடியாது.

தொழில் ரீதியாக தோற்றுப் போனவர்களும்,தான் மட்டுமே பணக்காரனாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும்,அத்தோடு மட்டுமல்லாது பிரரின் பினத்தை திண்டு கொண்டு புத்தளத்தினை நாசமாக்கும் அநாகரிகம் கொண்டவர்களின் இந்த நடவடிக்கையினால் புத்தளத்தின் மானம் காற்றில் பரக்க நேரிட்டுள்ளது.புத்தளத்தை காப்போம் என்று கூறிக் கொண்டு புத்தளத்தை அவமானப்படுத்தும் இந்த அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ்வின் பார்வை நிச்சயம் உண்டு.

அல்லாஹ் மீது அச்ச உணர்வு கொண்ட எவரும் இந்த அவதூறினை  ஒரு போதும் கூறமாட்டார்கள் என்பதில் எமக்கு எவ்வித மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை.

அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பவர் இந்த நாட்டு முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முஸ்லிம் தலைவர் என்பதை கண்டு அச்சம் கொண்டுள்ள அரசில் பின்னடைவாளர்களின் அசிங்கத்தனமான இந்த துரோகத்தனமான இட்டுக்கட்டப்பட்ட முகநுால் செய்தியானது அப்பட்டமான அரசியல்வாதியின் சூதாட்ட கும்பலின் பிரசாரமாகவுள்ளதை எம்மால் பகிரங்கமாக கூற முடியும்.

கள்ளக்கடத்தலும்,போதைப்பொருள் கடத்தலும் செய்யும் எந்த வித தேவைப்படும் எமது தேசிய தலைவருக்கு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.அவர் மக்களின் தலைவர்.கயவர்களின் தலைவர் அல்ல என்பதை இந்த முகநுாலில் எழுதும் அசிங்கம் பிடித்தவர்கள் புரிந்து கொள்வதோடு,இல்லாதவற்றை சொல்லும் இவர்களது வாழ்க்கையின் அது வந்துவிடாமல் அல்லாஹ் அவர்களை பாதுகாக்க வேண்டும் என்பத தான் எங்களது பிரார்த்தனை.

 

முனவ்வர்.ஏ.காதர்

munawwar-a-cader