மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதலுக்கு கவலை தெரிவித்து சம்மன் !

Malaysia-Ready-to-Finance-Projects-in-Sri-Lankaமலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்சர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் கவலை வௌியிட்டு, மலேஷிய உயர்ஸ்தானிகருக்கு இலங்கை வௌிவிவகார செயலாளர் சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

மாநாடு ஒன்றுக்காக மலேஷியா சென்றிருந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அந்த நாட்டிலுள்ள தமிழர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

இந்தநிலையில் நேற்றையதினம் மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்சர் மீது கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.