எம்மை நாமே பாதுகாப்போம்

14233568_695081903979265_1343451764_oSM சபீஸ் 
பார்வையிடுவதும், பார்த்துவிட்டு அறிக்கைவிடுவதும், அமைச்சரவையில் பேசாபூனையாக இருந்துவிட்டு பாராளுமன்றில் பூச்சாண்டி காட்டுவதுமான ஏமாற்று வேலைகளை மக்களின்று உணர்ந்துவிட்டனர் . 
நாங்கள் கண்ட தலைமை மக்களுக்கு தேவையானவற்றை சத்தமின்றி செய்துவிட்டு, இதுதான் வழி நடந்துசெல் என்று எடுத்தியம்பியவர்கள். 
நமது உடமை, உரிமை, உறவு, போன்றவற்றை பாதுகாத்து உறுதிப்படுத்த நமக்கு வெளிநாட்டு சக்திகள் கிடையாது உள்நாட்டில் இருக்கின்ற தலைமைகள் அயல்வீட்டில் இழவுவிழுந்தால் நமக்கென்ன, என்பை நிரம்பினால்போதும் என்கின்ற மனநிலையில் உள்ளனர். 
 
நமது சமூகத்தின் அடையாளத்தை பாதுகாக்க கடந்த காலங்களில் நாம் செயற்பட்டதுபோல் மீண்டும் எழுவோம் எம்மை மிதித்து நசுக்க நினைக்கும் இரக்கம் இல்லாத வஞ்சகர்கள் போதும் என்று சொல்லும்வரை நாம் போராட புறப்படுவோம்.