நாட்டை முன்னோக்கி கொண்டுச்செல்ல யாருடனும் இணைந்து செயற்பட தயார்: சந்திரிக்கா

chandrika_file_slg_xx-500x360கடந்த அரசாங்கத்தினால் பாழடிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஐக்கியதேசிய கட்சியுடன் இணைந்து கொள்ள தீர்மானித்தமையில் எந்த தவறும் இல்லை என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனை தெரிவித்துள்ளார். 

நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் நாட்டை முன்னோக்கி கொண்டுச்செல்லவும் யாருடன் வேண்டுமென்றாலும் இணைந்து செயற்பட தாம் தயார் என்றும்சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார். 

அத்தனகல பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.