24 மணி நேரத்துக்குள் பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு

பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு இன்னும் 24 மணித்தியாலயங்களுக்குள் தீர்வொன்றை பெற்றுத்தருவதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மோஹன் லால் கிரேரோ தெரிவித்துள்ளார்.

இன்று  (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

குறித்த ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வொன்றை பெற்று, அவர்களை சேவையில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் தொடர்ந்து 11 நாட்களாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.