புகையிலை நிறுவனங்களின் வரியை 90 வீதமாக அதிகரிக்கப்படும்: ராஜித்த

அனைத்து வெட் வரிகளையும் நீக்கிவிட்டு புகையிலை நிறுவனங்களின் வரியை 90 வீதமாக அதிகரிப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

raajitha senaratne

அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி மற்றும் தன்னுடைய கூட்டு யோசனையாக அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்பிப்பதாக அவர் மேலும் கூறினார். 

அதன்படி புகையிலை நிறுவனங்களினால் தற்போது அறவிடப்படும் நூற்றுக்கு 72 வீத வரி 90 வீதமாக அதிகரிக்கப்படும் என்று அவர் கூறுகின்றார். 

இதன்மூலம் வெட் வரி ஊடாக கிடைக்கும் வருமானத்தை விட அதிக வருமானம் பெறமுடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.