இன்று இடம்பெறவுள்ள டி20 போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்துமா இலங்கை ?

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியான டி20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியிலாவது வெற்றிப்பெற வேண்டும் என்ற நோக்கில் இலங்கை அணி பல முயற்சிகளை எடுத்து வருகின்றது.

இந்த இறுதிப் போட்டிக்காக இலங்கை அணிக்கு சகலதுறை வீரர் ரமித் ரம்புக்வெல்ல இங்கிலாந்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ரம்புக்வெல்ல இலங்கை ஏ அணிக்காக 2013 ஆம் அண்டு ஒரு டி20 போட்டியில் நியுஸிலாந்து அணிக்கெதிராக விளையாடியுள்ளார். இந்த போட்டியில் 19 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டினை கைப்பற்றியுள்ளார்.

இதேவேளை ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயற்பட்ட உபுள் தரங்கவையும் டி20 போட்டியில் இணைத்துக்கொள்ளும் வாய்ப்பு காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து அணி சார்பில் ஜோரூட், ஹேல்ஸ் மற்றும் மொஹின் அலி ஆகியோருக்கு டி 20 போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை இழந்த இலங்கை டி20 போட்டியில் வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.