எவ்விதமான அபிவிருத்தியும் நடக்கவில்லை என்றால் பதவியை தக்கவைத்து கொள்ள போவதில்லை

கட்சிக்காக எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரான அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பொலன்நறுவை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கட்சியில் புதிதாக இணைந்து கொள்ள பலர் தயாராக உள்ளனர். இது சம்பந்தமான யோசனையை  அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் முன்வைக்க உள்ளேன்.

தேசிய அரசாங்கத்தில் எவ்விதமான அபிவிருத்தியும் நடக்கவில்லை என்றால்,பதவியை தக்கவைத்து கொள்ள போவதில்லை எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.