அய்யூப் அஸ்மீனை நீக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானம்?

பாறுக் ஷிஹான்

வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அயூப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்தும் மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆம் திகதி சனிக்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கொழும்பில் நடைபெற்றது.
ஆந்த கூட்டத்தின் போதே, தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் 4 கட்சிகளைக் சேர்ந்த உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் வலியுறத்தியுள்ளனர்.
 12066030_10153646573167270_8660456151882516947_n_Fotor
கடந்த 3 வருடங்களாக மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினராக மாவனல்ல பகுதியைச் சேர்ந்த அஸ்மின் அயூப் பதவி வகித்து வருகின்றார்.
மாகாண சபையில் பல குழப்பங்களை விளைவிப்பதாகவும், குற்றஞ்சாட்டியுள்ளதுடன், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவர் மீது எந்த வித அதிதிருப்தியும் இல்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆந்தவகையில், வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அயூப்பை மாற்றி வேறு ஒரு நபரை யாழ்ப்பாணத்தில் பிறந்த ஒருவரை நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆளும் கட்சிக்குள் பெரும் பான்மையானவர்கள் அஸ்மின் அயூப் மீதான கருத்துக் கணிப்பினை முன்னெடுத்தால் எதிரான கருத்துக்கணிப்பினையே தெரிவிப்பார்கள் என்றும் அந்தளவிற்கு  அவர் மீது உறுப்பினர்களுக்கு அதிதிருப்பதி இருப்பதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இதுவரையில், வேறு நபர் யாரென்றும் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை என்பதுடன், முக்கியமாக யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த நபர் ஒருவரை நியமிக்க வலியுறுத்தி வருவதாகவும் மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.