அவர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் வழக்குகள் பதிவு செய்துள்ளன. அவருக்கு எதிராக பல்வேறு கோர்ட்டுகள் பிடிவாரண்டுகள் பிறப்பித்துள்ளன. அவர் இங்கிலாந்து பாஸ்போர்ட் வைத்துள்ளதால், அவரை இந்தியாவுக்கு அனுப்புமாறு விடுத்த கோரிக்கையை இங்கிலாந்து அரசு ஏற்க மறுத்து விட்டது. நேற்று விஜய் மல்லையாவின் ரூ.1411 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியது.
இந்நிலையில், விஜய் மல்லையாவை அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்று பணமோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
பண மோசடி விவகாரத்தில் மத்திய அமலாக்கத்துறை அளித்த கோரிக்கையை ஏற்று சிறப்பு நீதிபதி பி.ஆர்.பாவ்கே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் தற்போதையை நிலவரத்தை தெரிவித்ததோடு, விசாரணைக்கு மல்லையாவின் ஒத்துழைப்பு தேவை என்பதையும் அமலாக்கத்துறை வலியுறுத்தியது.
மேலும், “செக் மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் மல்லையா மீது ஏராளமான பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளது. மேலும், பண மோசடி வழக்கிலும் அவர் தேடப்பட்டு வருகிறார்.” என்றும் அமலாக்கத்துறை தெரிவித்தது.