இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை: கில்லஸ்பி மறுப்பு

jasongillespie-cro_2867822b_Fotor

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்து இருந்தது. இந்த பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்வு குழு தலைவரான சந்தீப் பட்டீல், அணியின் இயக்குனராக பணியாற்றிய ரவிசாஸ்திரி ஆகியோர் ஏற்கனவே பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருந்தனர்.

ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கில்லஸ்பி, மிடில் ஆடர் மேட்ஸ்மேன் ஸ்டூவர்ட்லா ஆகியோரும் இந்த பதவிக்கு விண்ணப்பித்து உள்ளதாக செய்தி வெளியானது. 

ஆனால் தற்போது கில்லஸ்பி இதனை மறுத்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர் “நான் விண்ணப்பிக்கவில்லை. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு சிறந்த நபரை தேர்வு செய்ய வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

நாளையுடன் விண்ணப்பம் செய்வதற்கான தேதி முடிகிறது. இதனால் மேலும் சிலர் பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.