ஒரு ஈரல் கொண்ட இரட்டைக் குழந்தை !

அமெ­ரிக்க புளோ­ரிடா மாநி­லத்தில் ஒரே ஈரலை தம்­மி­டையே பங்­கீடு செய்த நிலையில் சிக்­க­லான முறையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்­தை­களை மருத்­து­வர்கள் 8 மணி நேர அறு­வைச்­சி­கிச்சை மூலம் வெற்­றி­க­ர­மாக பிரித்­துள்­ளனர்.

அந்தக் குழந்­தைகள் 5 மாதங்­க­ளுக்கு முன் பிறந்த போது, அவை உயிர் பிழைப்­ப­தற்கு 25 சத­வீத வாய்ப்பே உள்­ள­தாக மருத்­து­வர்­களால் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில் மேற்­படி குழந்­தை­க­ளுக்­கி­டையே பங்­கீடு செய்­யப்­பட்­டி­ருந்த தனி­யொரு ஈரலை இரண்­டாகப் பிளந்து இந்த இரட்­டை­யர்­களை முழு­மை­யாக பிரிக்கும் இந்த அறு­வைச்­சி­கிச்­சையில் 17 சத்­தி­ர­சி­கிச்சை நிபு­ணர்கள் பங்­கேற்­றி­ருந்­தனர்.

அறுவைச் சிகிச்சை வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்­றப்­பட்­டமை அறி­விக்­கப்­பட்­டதும் அந்தக் குழந்­தை­களின் தாயா­ரான மிசெல் பிரான்ட்லி (24 வயது), தந்­தை­யான பிறையன் மிராபெல் ( 26 வயது) மட்­டு­மல்­லாது மருத்­து­வ­ம­னையில் காத்­தி­ருந்த அவர்­க­ளது உற­வி­னர்­களும் ஆனந்த மிகு­தியால் கண்ணீர் விட்டு அழு­துள்­ளனர்.

அறு­வைச்­சி­கிச்­சையை­ய­டுத்து கார்ட்டர் மற்றும் கோர்னர் மிராபெல் என்று இந்த இர ட்டை ஆண் குழந்­தைகள் உடல் நலம் தேறி வரு­வ­தாக மருத்­து­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.
இவ்­வாறு உடல் ஒட்­டிய நிலையில் இரட்­டை­யர்கள் பிர­ச­வ­மா­வது 200,000 பிறப்­பு­க­ளுக்கு ஒன்­றென இடம்­பெறும் அபூர்வ நிக ழ்­வாகும்.