அசாம் வெள்ளத்தில் 45 ஆயிரம் பேர் பாதிப்பு – மீட்பு பணிகள் தீவிரம்

201604242140317269_45-000-People-Affected-In-First-Wave-Of-Floods-In-Assam_SECVPF

அசாமில் சிவசாகர் பகுதியில் பர்ஹிடிஹிங் மற்றும் தேசங் நக்லமுரகா ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி   வெள்ளம் ஓடுகிறது.  இதனால் 1,018 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.  அதனுடன் லகீம்பூர், ஜோர்கட், சிவசாகர் மற்றும் சராய்தியோ மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரம் பேர் வெள்ளத்தினால் பாதிப்படைந்துள்ளனர்.

சராய்தியோ பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு பணிக்காக ராணுவம், தேசிய பேரிடர் நிவாரண படை மற்றும் மாநில பேரிடர் நிவாரண படை ஆகியவற்றை சேர்ந்த குழுவினர் குவிக்கப்பட்டு, தீவிர மீட்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது.