மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கு தகுதி தராதம் பாராது தண்டனை வழங்கப்படும்

mahinda raja

 

காலி மே தினக் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வந்தாலும் வராவிட்டாலும் கூட்டம் வெகுசிறப்பாக நடத்தப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் காலியில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளாது வேறு மே தினக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் சுதந்திரக் கட்சியினருக்கு தகுதி தராதம் பாராது தண்டனை வழங்கப்படும்.

வேறு மே தினக் கூட்டங்களில் கலந்து கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.