அ.தி.மு.க. ஆட்சியில் விலைவாசி ஏற்றம் பெற்றுவிட்டது : விஜயகாந்த் பிரச்சாரம்

02-1454416399-vijayakanth-new--600_Fotor

 

தே.மு.தி.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து அவர்களுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அவர் பேசுகையில், “வரும் சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க., மக்கள்நலக் கூட்டணி, த.மா.கா. அணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தோல்வியடையும். எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சொல்லாத பல திட்டங்களை நிறைவேற்றுவோம். 

அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்றம் பெற்றுவிட்டதாக கூறுகிறார்கள். விலைவாசிதான் ஏற்றம் பெற்றுள்ளது. தமிழக மக்களை நெருக்கடியில் நிற்க வைத்ததுதான் ஜெயலலிதா அரசின் சாதனை. மதுவிலக்கு குறித்து தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பேசுவது மக்களை ஏமாற்றும் நாடகம்” என்றார் விஜயகாந்த்.