அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு அச்சம் கொண்டுள்ளது :பிரசன்ன ரணதுங்க

Unknown

தற்போதைய அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு அஞ்சி பின்நிற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தி, ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பிரசன்ன ரணதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார்