900 அமெரிக்க கடற் படையினருடன் கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத் தந்துள்ள புளு ரிச்

கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத் தந்துள்ள அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான புளு ரிச் கப்பலை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றுள்ளார்.

கப்பலுக்கு சென்ற ஜனாதிபதிக்கு அமெரிக்க கடற்படையினர் வரவேற்பு நிகழ்வொன்றையும் ஏற்பாடு செய்திருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்க கடற்படையினர் புளு ரிச் கப்பலில் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர். 

900 அமெரிக்க கடற்படையினரை சுமந்தவாறு இந்த கப்பல் இலங்கைக்குள் பிரசன்னமாகியுள்ளது. 

அமெரிக்க கப்பலை பார்வையிட்ட ஜனாதிபதி, அதனைத் தொடர்ந்து கப்பல் கேப்டனுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.