மக்கள் போராட்டம் என்ற தொனிப் பொருளில் தேசிய அரசாங்கத்திற்கு எதிராக கூட்டம் !

prasanna ranathunge
கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் சகல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்…

மக்கள் போராட்டம் என்ற தொனிப் பொருளில் தேசிய அரசாங்கத்திற்கு எதிராக இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர்ந்த மாகாணசபை, உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் முன்னாள் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சி இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி தொகுதி அடிப்படையில் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

படைவீரர் ஒடுக்குமுறை, ஊடக அடக்குமுறை, உர மானிய இரத்து, கூடுதல் வரி அறவீடு போன்றவற்றுக்கு எதிர்ப்பை வெளியிட்டு நடத்தப்பட உள்ள மக்கள் போராட்டம் என்ற கூட்டம் எதிர்வரும் காலங்களில் மாதந்தோறும் நடைபெறவுள்ளது என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.