அரசியல்வாதிகளின் நலன்களைவிடவும் முஸ்லிம் மக்களின் நலன்களை உறுதி செய்ய வேண்டும் !

basheer cegu dawood slmc

முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுத் திட்டம் அவசியம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

 
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நிரந்தமானதும், நீடித்திருக்கக் கூடிய வகையிலும் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.முஸ்லிம் சமூகம் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 
அரசியல்வாதிகளின் நலன்களைவிடவும் முஸ்லிம் மக்களின் நலன்களை உறுதி செய்ய வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

 
தனியான முஸ்லிம் மாகாண அலகு ஒன்று அவசியம் என அண்மையில் தாம் காத்தான்குடியில் கூறியது ஊடகங்களில் பிழையாக மொழிபெயர்க்கப்பட்டு சர்ச்சை கிளப்பப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் மக்களின் அபிலாஸைகள் பற்றி பேசப்படும் போது அது ஜிஹாதியமாக பேசப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.