மஹிந்த ராஜபக்சவும் அவரின் குடும்ப உறுப்பினர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் : விஜித் விஜியமுனி !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அவரின் குடும்ப உறுப்பினர்களும் பாதுகாக்கப்பட வேண்டு;ம் என்று அரசாங்கத்தின் நீர் முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜியமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் மத்தியில் இந்தக்கருத்தை அவர் தெரிவித்துள்ளார். 

wijith wijayamuni

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு விமர்சனங்களை வெளியிட முடியாது என்றபோதிலும் முன்னாள் முதல் குடும்பத்தை பாதுகாப்பது அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

எவர் மீது குற்றம் சுமத்தப்பட்டாலும் அது நீதிமன்றத்தின் மூலமே தெளிவாக்கப்படும். எனினும் அரசியல்வாதிகள் சட்டத்தை கையிலெடுக்கக்கூடாது.

இதற்கு முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நடவடிக்கையும் ஒரு உதாரணம் என்று சொய்ஸா குறிப்பிட்டுள்ளார்.