பராமரிப்பாளர் ஒருவர் புலியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி!

உலக புகழ்பெற்ற முதலை வேட்டைக்காரர் ஸ்டீவ் இர்வினின் மனைவியால் நடத்தப்பட்டு வரும் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற வன விலங்குகள் பூங்காவின் பராமரிப்பாளர் ஒருவர் புலியால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

images

குயீன்ஸ்லேண்ட் மாநிலத்தின் சன்ஷைன் கடற்கரைப்பகுதியில் உள்ள ‘ஆஸ்திரேலியா வனவிலங்கு பூங்கா’ சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான ஒன்று. அந்த பூங்காவின் பராமரிப்பாளராக பணியாற்றி வரும் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவரை அங்குள்ள புலி இன்று பலமாகத் தாக்கியுள்ளது.

இந்த தாக்குதலில் பராமரிப்பாளரின் தலையில் புலியின் பல்தடம் ஆழமாகப் பதிந்ததால் அதிகளவு ரத்தம் வெளியானது. உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீரான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.