அமைச்சர் ஹக்கீமின் கொள்ளுப்பிட்டி வாசஸ்தலத்தை நோக்கி கட்சியின் அபிமானிகள் படையெடுப்பு !

12219495_1737334689833205_1471906463063955549_n-e1448093800799_Fotor

 

மீரா அலி ரஜாய்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஹக்கீமின் சகோதரருமான எ.ஆர் .எ .ஹபீஸ் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து அமைச்சர் ஹக்கீமின் கொள்ளுப்பிட்டி வாசஸ்தலத்தை நோக்கி கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் ,தேசியப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் , மற்றும் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர்கள் தங்களின் அபிமானிகளை அழைத்துக் கொண்டு தேசியப் பட்டியலுக்கு தங்களை நியமனம் செய்யுமாறு கோரி படை எடுத்துள்ளதாக கொள்ளுப்பிட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் ஹக்கீம் அவர்கள் இம் முறை காலம் தாழ்த்தாமல் உடனடியாக புதிய தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரை நியமனம் செய்வதன் மூலம் முஸ்லிம் சமூகத்தினதும் , கட்சிப் போராளிகளினதும் நீண்ட நாள் விடை தெரியாத புதிராக இருக்கும் தேசியப்பட்டியல் எனும் வினாவுக்கு விடை கண்ட தலைவனாக மாறுவார் என்பது திண்ணம் .