அடுத்த மாதத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு விதிகளில் மாற்றம்: மலிக் சமரவிக்ரம

UNP-Logo
ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு விதிகள் அடுத்த மாதத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

”கட்சியின் யாப்பு மாற்றம் தொடர்பில் செயற்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. கட்சி யாப்பு மாற்றத்துடன் கட்சி மறுசீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. எவ்வாறெனினும் கட்சி மறுசீரமைப்பு பணிகளின் போது கட்சியின் பிரதித் தலைவர் பதவி உள்ளிட்ட ஏனைய பதவிகள் ரத்து செய்யப்படுமா? இல்லையா? என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

புதிய பதவிகளை ரத்து செய்தல் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். எவ்வாறான மாற்றங்களைச் செய்வது என்பது குறித்து எதிர்வரும் நாட்களில் தீர்மானிக்கப்படும்” என கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். 

கட்சியின் யாப்பு மாற்றம் மற்றும் பதவி மாற்றம் குறித்து கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.