acmc இன் பேராளர் மாநாட்டை அம்பாரை மாவட்ட போராளிகள் பகிஸ்கரிக்க வேண்டுகோள்- எம்.எஸ். சுபைர்

 

 

எஸ்.அஷ்ரப்கான், றியாஸ் ஆதம், எம்.வை.அமீர்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் உயர்பீட  உறுப்பினர்கள், போராளிகளுக்கு அறிவிக்கப்படாமல் பேராளர் மாநாட்டை அம்பாரை மாவட்ட போராளிகளும், முக்கியஸ்தர்களும் பகிஸ்கரிக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் தெரிவித்துள்ளார். 

subair mpc

இது விடயமாக அவர் மேலும் குறிப்பிடும்போது,

அன்மைய பொதுத் தேர்தலில் 33 ஆயிரம் வாக்குகள் வழங்கிய மற்றும் ஆதரவு வழங்கிய பெருந்தகைகள் இங்குள்ள மக்களை அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஏமாற்றியுள்ளார். தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அம்பாறை மாவட்டத்திற்கு தேசியப்பட்டியல் எம்.பி. தருவோம் என்ற விடயம் நிராகரிக்கப்பட்டமை, கட்சியின் உருவாக்கத்திற்கு காரண கர்த்தாவான, மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரபுடன் இருந்து அரசியல் அனுபவம் பெற்ற  இக்கட்சியின் செயலாளர் நாயகத்தை அவமானப்படுத்தும் வகையில் இடை நிறுத்தியுள்ளோம் என கொழும்பில் கூடி சட்ட விரோதமாக முடிவெடுத்தமை, மற்றும் எம்.பி. பதவியை வழங்க மறுத்தமை போன்ற பல காரணங்களினால் அம்பாறை மாவட்ட மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். எனவேதான் அங்குள்ள பலரும் இது விடயமாக எனக்கு அறிவித்த வண்ணம் தமது இதயக் குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றமையால் இந்த சிறுபிள்ளைத் தனமான பேராளர் மாநாட்டை  அம்பாரை மாவட்ட மக்கள் மட்டுமல்லாது முழு இலங்கையிலும் இருக்கும் கட்சியின் போராளிகள், ஏமாற்றப்பட்டுள்ள உயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் இந்த பேராளர் மாநாட்டை பகிஸ்கரிக்குமாறு வேண்டகோள் விடுக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.