பதான்கோட் தாக்குதல் சம்பவத்திற்கு சீனா மீண்டும் கண்டனம்!

 

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமான தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு சீனா இன்று மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்தியாவிற்கான சீன தூதர் லி யுசென்ங் கூறுகையில், “சீனாவும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு. நாங்கள் இந்திய மக்களின் உணர்வுகளையும் கோபங்களையும் பகிர்ந்து கொள்கிறோம். தீவிரவாத தாக்குதல் எங்கு நடைபெற்றாலும் அதனை சீனா கடுமையாக கண்டிக்கும்” என்றார்.

8e37be3f-b955-4a2d-8507-384b853bdab5_S_secvpf 

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பதான்கோட் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்த சீனா, இந்த தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை பாதிக்காது என்றும் நம்பிக்கை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.