அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றி : அமைச்சர் ராஜித்த

rajitha
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியுடன் நிறைவடைந்துள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

நேற்று பிற்பகல் சுகாதார அமைச்சில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

பாணதுறை நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

அத்துடன் இந்த சந்திப்பின் போது, வாகன அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொடுத்தல் மற்றும் சம்பள முரண்பாடுகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

அரச வைத்திய அதிகாரிகளுக்கு மேலும் பிரச்சினைகள் இருப்பின், அவற்றையும் தீர்த்து வைக்கத் தான் தயார் என குறிப்பிட்ட ராஜித்த, கலந்துரையாடல்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதே நல்லாட்சியின் பிரதான அம்சம் எனவும் தெரிவித்துள்ளார்.