வரவு செலவுத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் !

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வரவு செலவுத்திட்டம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்து வருவதாக அங்கி்ருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

அத்துடன், மழை பெய்து கொண்டிருந்த நிலையிலும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். 

இதேவேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாகவும், பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாகவும் எமது செய்தியாளர் கூறினார்.