நத்தார் இசை நிகழ்ச்சி இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது!

“நத்தார் சிறுவர்களுக்கு” என்ற தொனிப்பொருளில் பிரதமர் அலுவலகமும் கிறிஸ்தவ விவகார அமைச்சும் இணைந்து நடத்திய நத்தார் இசை நிகழ்ச்சி அலரி மாளிகையில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டதுடன் நாடு முழுவதும் கத்தோலிக்க அறநெறி பாடசாலைகளின் சிறார்கள் மாத்திரமல்லாது சிறுவர் இல்லங்களில் உள்ள பெரும்பாலான சிறார்களும் கலந்து கொண்டனர். 

temple_tree_xmas_001

இவர்களை தவிர சுற்றுலா ஊக்குவிப்பு மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, தென் மாகாண அபிவிருத்தி மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

temple_tree_xmas_002