எதர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு மட்டக்களப்பில் கௌரவிப்பு !

ஜவ்பர்கான்

 

தமிழ் மக்களுக்கு ஆற்றிவரும் பணிகளுக்காக எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் மட்டக்களப்பு மாவட்ட மக்களால் கௌரவிக்கப்பட்டார். மட்டக்களப்பு ,இந்து ,இளைஞர் பேரவை மற்றும் அகில ,இலங்கை ,இந்து மாமமன்றம் என்பன ,இணைந்து கௌரவித்தது. அகில ,இலங்கை ,இந்து மாமமன்றத்தின் 60தாவது ஆண்டு நிறைவு விராவின் இறுதி நாளிலேயே இப்பாராட்டு விழா நடைபெற்றது.

DSCN4126_Fotor

 

மட்டக்களப்பு ,இந்து ,இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் கிழக்கு பலக்லைக்கழக இந்து மாணவர் மன்றத்தின் ஆதரவுடன் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு நாவற்குடா சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவக மண்டபத்தில் நடைபெற்றது.

 

இதன் போது சம்பந்தனுக்கு பொன்னாடை போர்த்தியதுடன் மலர் மாலை அணிவித்து நினைவு மடல் வழங்கி தலைப்பாகை அணிவித்து கௌவரவித்தனர்.

DSCN4104_Fotor

அகில இலங்கை ,இந்து மாமமன்றத்தின் தலைவர் சட்டத்தரணி கந்தையா நீலகண்டன், தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் இந்தியா பேரூர் ஆதினம் சீர்வளச்சீர் மருதாசல அடிகளார், மற்றும் நல்லை ஆதினத்தைச் சேர்ந்த முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமச்சாரிய சுவாமிகள் மற்றும் மட்டக்களப்பு இராம கிருஸ்னமிஸன் தலைவர் சதுர்புகுஜானந்தஜி மகராஜ் மற்றும்; அகில இலங்கை இந்து மாமமன்றத்தின பொதுச் செயலாளர் மு.கதிர்காமநாதன், மட்டக்களப்பு ,இந்து ,இளைஞர் பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.யோகேஸ்வரன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்கள் அகில ,இலங்கை ,இந்து மாமன்றத்தின் முக்கியஸ்தர்கள், மட்டக்களப்பு ,இந்து ,இளைஞர் பேரவையின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

DSCN4070_Fotor