துறைமுக நகர் அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்க இலங்கை தயாராக உள்ளது : சீனா தகவல் !

துறைமுக  அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்க இலங்கை தயாராக உள்ளது என சீனா தகவல் வெளியிட்டுள்ளது.

Sri-lanka-china
இடைநிறுத்தப்பட்டுள்ள குறித்த திட்டத்தை முன்னெடுக்க இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தித்திட்டம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகிய திட்டங்கள் இலங்கையின் அபிவிருத்;திக்கும், சீனப்பட்டுப்பாதைக்கும் முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை மீளாய்வு செய்து இலங்கை அரசாங்கம் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் என சீன வெளிவிவகார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சீன அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இரு நாடகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.