தமிழகத்தில் மழை வெள்ளத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு!

 

தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 

modi

மேலும், வெள்ளத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் மோடி கூறியுள்ளார். 

முன்னதாக, தமிழக வெள்ள பாதிப்புகளை கடந்த வியாழக்கிழமை நேரில் பார்வையிட்ட பிரதமர் மோடி, முதலமைச்சர் ஜெயலலிதாவையும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும் மத்திய அரசு 1000 கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்கும் என்றும் அப்போது அறிவித்திருந்தார். 

தமிழகத்தில் கடந்த 4 வார காலமாக பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மழையால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.