அவன்கார்ட் சம்பவம் தொடர்பில் விசேட அமைச்சரவை கூட்டத்தை நடாத்த ஜனாதிபதி தீர்மானம் !

 

அவன்கார்ட் சம்பவம் தொடர்பில் விசேட அமைச்சரவை கூட்டத்தை நடாத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

maithiri

இந்த விசேட கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ளதாக மொரகஹகந்தையில் இன்று (06) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அவன்கார்ட் சம்பவம் தொடர்பில் வெளிப்படையாக கலந்துரையாடி, பக்கசார்பற்ற தீர்மானத்தை எடுக்க அமைச்சரவைக்கு சந்தர்ப்பம் வழங்குவதாக இதன் போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.