அரசாங்க உத்தியோகத்திற்காக வயதெல்லையை அதிகரிக்க யோசனை!

 

அரசாங்க உத்தியோகத்திற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள வயதெல்லை​யை மேலும் 10 வருடங்கள் அதிகரிக்கும் யோசனை ஒன்றை அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். 

rajitha

தற்போது அரசாங்க உத்தியோகத்திற்கான அதிகபட்ச வயதெல்லை 30 தொடக்கம் 35 வரையாக உள்ளது. 

இதனால், சிலருக்கு தொழிலைப் பெறும் வயது பிரச்சினையாக இருப்பதால் தொழிற்படையில் சேர முடியால் உள்ளதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார். 

மக்களுக்கு சாதகமான வகையில் தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மதுகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே ராஜித்த மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.