அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வீசிய புயல் காரணமாக 16 பேர் உயிரிழப்பு !

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வீசிய புயல் மற்றும் பெய்த கடும்மழை காரணமாக 16 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

us-rain
தொடர்மழையின் விளைவாக வீதி போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சில வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் அங்கிருந்தவர்களை மீட்புப் படையினர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 

ஹ_ஸ்டன் நகரில் இருந்து பல பகுதிகளுக்கு செல்லும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் அடுத்த 24 மணிநேரத்தில் ஹ_ஸ்டன் அருகேயுள்ள லா போர்ட்டே மற்றும் ஃபிரண்ட்ஸ்வுட் பகுதிகளை சூறாவளி தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.