இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தாக்குதலில் பல பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் !

 

பலஸ்தீனத்தின் மேற்கு கரைப் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தாக்குதலில் பல பலஸ்தீனியர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திள் தெரிவிக்கின்றன. 

நேற்று பலஸ்தீனத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேல் இராணும் மேற்கொண்ட தாக்குதலில் 04 பேர் பலியாகியுள்ளதுடன் 12 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 

951754474Palastine
இதேவேளை இஸ்ரேல் இராணும் இன்று மேற்கொண்ட இரண்டு வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 03 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கிழக்கு ஜெரூஸலமின் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப்பகுதியில் நுழைய முற்பட்ட பலஸ்தீனியர்கள் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இவைதவிர எபிரோன் என்ற இடத்தில் பலஸ்தீனிய பெண் ஒருவர் உட்பட 02 பேரை இஸ்ரேல் இராணும் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

எவ்வாறாயினும் இதுவரை இஸ்ரேல் இராணும் 42 பலஸ்தீன் பொதுமக்களை கொன்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.