புதிய உறுப்பினர்களின் பெயர்கள் ஜனாதிபதியின் அனுமதிக்காக அனுப்பி வைப்பு !

அரசியலமைப்பு பேரவையினால் இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, அரச சேவைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள்ஆணைக்குழு ஆகியவற்றுக்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 

இன்று காலை கூடிய அரசியலமைப்பு பேரவையின் நிறைவேற்று சபையினால் குறித்த ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இதன்படி தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் ஜனாதிபதியின் அனுமதியைப் பெறுவதற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை 11.30 மணியளவில் கூடிய அரசியலமைப்பு பேரவை மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 4ம் திகதி கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அன்றைய தினம் சுயாதீன ஆணைக்குழுக்கள் சம்பந்தமான இறுதித் தீர்மானம் எடுக்ககப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.