பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் சற்று முன் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்!

 

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் சபாநாயகர் கரு ஜயசூரியவின் முன்னிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.

Mps

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் லக்ஸ்மன் செனவிரத்ன, ஐக்கிய தேசியக் கட்சியின் பாலித்த தெவரப்பெரும, மக்கள் விடுதலை முன்னணியின் பிமல் ரத்நாயக்க ஆகியோரே இன்று (22) பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் வெற்றியீட்டிய சாமர சம்பத் திசாநாயக்க, பின்னர் ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்தார்.

இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்காகவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் லக்ஸ்மன் செனவிரத்ன இன்று பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

தனது மகனின் மறைவால் பாலித்த தெவரப்பெரும கடந்த பாராளுமன்ற அமர்வில் பங்கேற்கவில்லை, இதற்கமைய இன்றைய தினம் அவர் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் எஸ்.மாயாதுன்னே தமது பதவியை இராஜினாமா செய்தமையினால் அவருக்கு பதிலாக பிமல் ரத்நாயக்க பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.