தோல்வியுற்ற நபர்களுக்கு தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற ஆசனம் வழங்கியமை ஜனநாயகத்திற்கு விரோதம் !

இடதுசாரிகளின் அழுத்தத்தை பாராளுமன்றில் இருந்து இல்லாது செய்வதன் நோக்கமாகவே தனக்கு தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற ஆசனம் வழங்கப்படவில்லை என ஸ்ரீலங்கா கம்யூனிச கட்சியின் பிரதான செயலாளர் டி.யு.குணசேகர தெரிவித்துள்ளார். 
தோல்வியுற்ற நபர்களுக்கு தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற ஆசனம் வழங்கியமை ஜனநாயகத்திற்கு விரோதம் என்றும் தோல்வியடைந்த நபர்களுக்கு உயர் அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 
dew gunasekara

அதற்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டார். 

ஐ.நா அறிக்கை குறித்து விசாரிக்க கலப்பு நீதிமன்றம் அமைப்பதை எதிர்ப்பதாகவும் உள்நாட்டு நீதிமன்ற பொறிமுறைக்கு இணங்குவதாகவும் அவர் கூறினார்.