இறுதி கட்ட யுத்தத்தில் 40,000 பேர் பலியானதாக முன்வைக்கப்படும் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது !

 இலங்கை இறுதி கட்ட யுத்தத்தில் 40,000 பேர் பலியானதாக முன்வைக்கப்படும் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

sri-lanka-3

யுத்தம் இடம்பெற்ற பகுதிகளுக்குச் சென்ற தமது ஆணைக்குழுவின் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். 

அந்த விசாரணையின் அடிப்படையில் இறுதி யுத்தத்தில் 7,700 பேர் வரையே பலியானதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஐ.நா அறிக்கை தயாரிக்க தமது ஆணைக்குழு அறிக்கையை கணக்கிலெடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.