மகனை தந்தை குத்திக்கொன்று தானும் தூக்கிட்டு தற்கொலை !

ஜவ்பர்கான்
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பருத்திச்சேனையில் இன்று நண்பகல் இடம்பெற்ற சம்பவத்தில் தந்தை மகனை கத்தியால் குத்தி கொலை செய்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

murder

சம்பவ்தை கண்டு பயந்து மனைவி தனது 4 மாத குழந்தையுடன் கிணற்றில் பாய்ந்ததில் இருவரும் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.நஸீர் தெரிவித்தார்.

 
தாமோதரம் வினோத் என்ற 8வயதான வாய்பேச முடியாத தனது மகனை தந்தை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.பின்னர் தாமோதரம் மகேந்திரன் ஆகிய 30 தந்தை தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது.

 
சம்பவத்தை கண்டு பயந்த மகேந்திரன் குணலக்ஸ்மி என்ற தாய் தனது 4 மாத குழந்தையான மகேந்திரன் தனுவுடன் கிணற்றில் பாய்ந்தபோது காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.