2 வருடங்களுக்குள் தேசிய விளையாட்டுக் கொள்கை !

தேசிய விளையாட்டுக் கொள்கையை இரண்டு வருடங்களுக்குள் அறிமுகப்படுத்தவுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

thayasri
அமைச்சராக இன்று காலை தமது கடமைகளைப் பொறுப்பேற்ற வேளையே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

மேலும் விளையாட்டு துறையிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் விரைவில் கலந்துரையாடி தீர்வு பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை விளையாட்டு சங்கங்களுக்கான தேர்தல்களையும் விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.