சங்கக்கார பற்றி மஹெல ஜெயவர்த்தன !

10153170_684607374932857_49156943033830934_n

 
இலங்கை அணி சர்வதேச போட்டிகளில் விளையாடிய நாளில் இருந்து இதுவரையில் உள்ள துடுப்பாட்ட வீரர்களில் மிகவும் சிறந்தவர் குமார் சங்கக்காரதான் என்று மஹெல ஜெயவர்த்தன புகழாரம் சூட்டியுள்ளார். 

இலங்கை அணியில் விக்கெட் காப்பாளராக களமிறங்கிய சங்ககார, பின்னர் தலைசிறந்த துடுப்பாட்ட வீரராக மாறினார். அவர் டெஸ்ட் போட்டிகளில் 12 ஆயிரம் ஓட்டங்களுக்கு மேலும், ஒருநாள் போட்டிகளில் 14 ஆயிரம் ஓட்டங்களுக்கு மேலும் குவித்துள்ளார். 

தற்போது இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய பின் சங்ககரா சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெறுகிறார். 

காலி டெஸ்டின் இறுதியில் சங்ககாரவிற்கு சிறப்பான வழியனுப்பும் விழா நடத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 

இந்தநிலையில் சங்கக்கார குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்த்தன கூறியதாவது:- 

இலங்கை அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரர் யாரென்று கேட்டால், குமார் சங்ககாரதான் என்று நான் ஒளிவு மறைவின்றி சொல்லுவேன். நான், அரவிந்த் டி செல்வா ஆகியோர் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் தான். 

இருந்தாலும், ஏராளமான சாதனையை உருவாக்கியவர் சங்ககார. சர்வதேச போட்டியில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் மூலம் 60-க்கும் மேற்பட்ட சதங்களை விளாசியுள்ளார். 

இது மிகவும் மலைக்கவைக்கும் எண்ணிக்கை’’ என்றார்.