சமஷ்டி முறை என்பது இந்த நாட்டைப் பிரிக்கும் முறையாகும் : முன்னாள் ஜனாதிபதி !

Mahinda-Rajapaksa_2827824b_11

 

சமஷ்டி முறை என்பது இந்த நாட்டைப் பிரிக்கும் முறையாகும். அந்த முறை கொண்டுவரப்படுமாயின் இந்த நாடு தானாகவே பிரிந்துவிடும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். சிலாபத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 அங்கு தொடர்ந்து உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ, ‘இந்த நாட்டின் அபிவிருத்தி தற்போது ஸ்தம்பிதமடைந்துள்ளது. 15 இலட்சம் பேர் வேலைவாய்ப்புக்களை இழந்துள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வாரத்திலேயே அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்குவோம்’ என்று உறுதியளித்தார்.