மு.கா. வேட்பாளர்களை ஆதரித்து ரணில் பிரசாரம்; கல்முனையில் 9ஆம் திகதி பொதுக் கூட்டம்!

20150805_110301_Fotorஅஸ்லம் எஸ்.மௌலானா
திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒன்பதாம் திகதி கல்முனைக்கு விஜயம் செய்யவுள்ளார். 
கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்பிரமாண்டமான பிரசாரப் பொதுக் கூட்ட ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக இன்று புதன்கிழமை கல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர், பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத் உட்பட மாநகர சபை உறுப்பினர்களும் கட்சி முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
20150805_110227_Fotor