வசந்த காலத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பை மாதந்தோறும் 1½ கோடியாக அதிகரிக்க ரஷ்யா முடிவு..

{"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1602744079980","subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"]}

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை தடுத்து நிறுத்துவதற்காக ‘ஸ்புட்னிக்-வி’ என்ற தடுப்பூசியை ரஷியா உருவாக்கி, அதன் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்தி வருகிறது.

இந்த தடுப்பூசியை நவம்பர் மாதம் 8 லட்சம் ‘டோஸ்’, டிசம்பர் மாதம் 15 லட்சம் ‘டோஸ்’, ஜனவரியில் 30-35 லட்சம் ‘டோஸ்’ தயாரிக்க ரஷியா திட்டமிட்டுள்ளது.

அதே நேரத்தில் வசந்த காலத்தில் (மார்ச், ஏப்ரல், மே) தடுப்பூசி தயாரிப்பை மாதந்தோறும் 1½ கோடி ‘டோஸ்’ அளவுக்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தொழில், வர்த்தக மந்திரி டெனிஸ் மந்துரோவ் தெரிவித்தார்.